திருமண பலாத்காரம் குற்றம் அல்ல – உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
திருமண பலாதாரம் தொடர்பான வழக்குகளில் கணவனுக்கு சட்டரீதியான தண்டனை வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிரடி தீர்ப்பு:
திருமண உறவுகளில் விருப்பமற்ற முறையில் உறவுகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்து சமீப காலமாக அதிக வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் வரதட்சனைக்காக கொடுமைப்படுத்தப்பட்ட மனைவி கணவர் மீது பாலியல் பலாத்கார வழக்குகளை பதிவு செய்தார். வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தின் கீழ் கணவருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் வேலை நேரம் – வலுக்கும் கோரிக்கை!!
மேல்முறையீட்டு விசாரணையில் மனைவி 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது திருமண பலாத்காரத்திற்கு சட்டப்படியான தண்டனைகள் இல்லை. 18 வயதிற்கு கீழ் இருக்கும் பட்சத்தில் போக்சோ பிரிவின் கீழ் கணவர் தண்டிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடிவில் கணவர் குற்றமற்றவர் என்றும், திருமண பலாத்காரம் குற்றம் ஆகாது என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.