பள்ளி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் சிக்கல் – அரசு விளக்கம்!
இந்தியா முழுவதும் இயங்கும் சைனிக் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஓய்வூதியம்:
மாணவர்களை ராணுவத்தில் ஈடுபட அவர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் சுமார் 33 இடங்களில் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியானது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் காலதாமதமாக கிடைப்பதாக புகார்கள் வந்தது.
ESIC நிறுவனத்தில் நேர்காணல் – 30+ காலியிடங்கள் || ரூ.2,40,000/- மாத ஊதியம்!
இது குறித்து அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சைனிக் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பிற பலன்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கு மாநில அரசுகளுடன் பாதுகாப்பு அமைச்சகம் உடன்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.