அரசு ஊழியர்களுக்கு கூடுதல் வேலை நேரம் – வலுக்கும் கோரிக்கை!!
அரசு நிர்ணயித்த வேலை நேரத்தை காட்டிலும் கூடுதலாக வேலை வாங்குவதால் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூடுதல் வேலை நேரம்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை காட்டிலும் கூடுதல் வேலை வாங்குவதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநில அரசு ஊழியர்களுக்கு காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வேலை நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி அல்லது மாலை 5:30 மணி வரையிலும் கூடுதல் பணி நேரத்தில் வேலை அமர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் டிச.10ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
இதனால், ஊழியர்களுக்கு பணி சுமை கூடுவதாகவும், பெண் ஊழியர்களால் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்க முடிவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு அரசு நிர்ணயித்த வேலை நேரத்தை கட்டாயமாக கடைபிடிக்க துறைகளின் தலைவர்களுக்கு உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.