மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ரயில்வே கட்டணம்
மக்கள் பலர் ரயில்களில் அதிகம் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேவையான சில அடிப்படை வசதிகளை செய்து ரயில்வே நிர்வாகம் வருமானம் ஈட்டுகிறது. அது மட்டுமில்லாமல் ரயில் டிக்கெட், சரக்கு போக்குவரத்து, விளம்பரம் மூலமாக ரயில்வே துறையின் வருமானம் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவிற்கு முன் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்கப்பட்டது.
NIMHANS நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் வேலை ரெடி – டிகிரி தேர்ச்சி போதும்!
ஆனால் கொரோனாவின் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த சலுகை வழங்கப்படவில்லை. அதனால் இந்திய ரயில்வேக்கு சுமார் 5,800 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. இந்த தகவல் ஆர்டிஐயின் கீழ் தெரியவந்துள்ளது. கொரோனாவிற்கு முன் மூத்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதம் மற்றும் மூத்த ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியை இந்திய ரயில்வே வழங்கியது குறிப்பிடத்தக்கது.