அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை திறந்த ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை நாடியது. அதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கைவிட்ட நிறுவனம்:
டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் போது அவரது ஐபோனுடன் சேர்ந்து மூன்று போன்களையும் அமலாக்கத்துறையானது கைப்பற்றியது. இம்மதுபான கொள்கை முறைகேடு குறித்த விசாரணைக்காக கெஜ்ரிவாலின் ஐபோன் தரவுகளை பதிவிறக்கம் செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்து வருகிறது.
EPFO பயனர்களுக்கு வெளியான புது அப்டேட் – இனி கவலையில்லை!
இதற்கான கடவுச்சொல்லை தர அவர் மறுத்துவிட்டதால் அமலாக்கத்துறை பல ஹாக்கிங் தெரிந்த சாப்ட்வேர் நிபுணர்களை கொண்டு ஐபோனை திறக்க முயற்சித்து தோல்வியை தழுவியது. பிறகு ஐபோனை திறக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்கத்துறை நாடியது. அதற்கு ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் கடவுச்சொல்லை கொண்டு மட்டுமே ஐபோனை திறக்க இயலும், எங்களால் இதில் உதவ முடியாது என கூறி அமலாக்கத்துறையை கைவிட்டது.