தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி நிதி – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு படிக்க இருக்கும் மாணவர்களுக்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிதி:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று ஐஐடி, இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் இளங்கலை படிப்பிற்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அறிவிப்பிற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், எந்தெந்த விதத்தில் மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன் பெறலாம் என்பதற்கான முழு விவரங்களையும் அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
அதாவது, ஐஐடி, இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட போனபைட் மற்றும் இந்த நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கல்வி கட்டண விவரங்கள் அனைத்தையும் எடுத்து சென்று மாணவர்கள் சொந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
EPFO திட்ட பயனாளர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – ஆயுள் சான்றிதழ் குறித்த அறிவிப்பு!
இதற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் மாணவரின் மொத்த விவரங்களையும் சரிபார்த்து மாணவரின் உயர்கல்விக்காக ஆகும் செலவின் மொத்த விவரங்களையும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்புவார். பின்னர், இந்த விவரங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அதற்கு ஏற்ற வகையில் கருத்துரு அனுப்ப வேண்டும். மேலும், இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், மாணவர்களின் விவரங்களை சரிபார்க்கவும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலமாக இணையதளம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்