EPFO திட்ட பயனாளர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – ஆயுள் சான்றிதழ் குறித்த அறிவிப்பு!

0
EPFO திட்ட பயனாளர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் - ஆயுள் சான்றிதழ் குறித்த அறிவிப்பு!
EPFO திட்ட பயனாளர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் - ஆயுள் சான்றிதழ் குறித்த அறிவிப்பு!
EPFO திட்ட பயனாளர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – ஆயுள் சான்றிதழ் குறித்த அறிவிப்பு!

இந்தியாவில் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை EPFO அமைப்பு வழங்கி வருகிறது. இதையடுத்து தற்போது ஓய்வூதியம் பெற ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். தற்போது இந்த சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை EPFO வெளியிட்டுள்ளது.

ஆயுள் சான்றிதழ்

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் அரசு ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக EPFO தொடர்பாக பல்வேறு வகையான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களின் ஓய்வூதிய பலன்களை பெற ஆயுள் சான்றிதழை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இச்சான்றிதழ் ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா ? என்பதை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதனை சமர்ப்பிக்கவில்லையெனில் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

திருமணத்திற்கு தயாராக இருக்க கோபியிடம் கூறும் சந்துரு, அதிர்ச்சியில் பாக்கியா – புதிய திருப்பங்கள்!

இந்த ஆயுள் சான்றிதழை பெற பிபிஓ நம்பர், ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் மற்றும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில் இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களின் ஆயுள் சான்றிதழை வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர் ஒருவர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்த நாளில் இருந்து 1 வருடத்திற்கு பிறகு மீண்டும் சமர்ப்பித்தால் போதுமானது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!