Post Office கணக்குதாரர்கள் கவனத்திற்கு – இந்த சான்றிதழ் கட்டாயம்.. அஞ்சல் துறை உத்தரவு!
இந்தியாவில் அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்களுக்கான முதலீட்டுத் தொகையை மாற்றியுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை அதிகாரபூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
சேமிப்பு திட்டம்:
இந்திய அஞ்சல் துறை மக்களை கவரும் வரையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கான KYC விவரங்களை தபால் துறை மாற்றியமைத்துள்ளது. அதன்படி இனி 10 லட்சத்திற்கு மேல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் KYC விவரத்துடன் வருமான சான்றிதழை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் நாளை (மே.29) மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!
அதாவது முதலீட்டாளர் வருவாய் ஈட்டியதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர ஆதார் மற்றும் பான் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது வருமான வரி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.