Post Office ல் 415 ரூபாய் செலுத்தினால் பெரும் லாபம் தரும் திட்டம் – முழு விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் சேமிக்க நினைக்கும் சேமிப்பாளருக்கான சிறந்த திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் விளங்கிவருகிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கான நலன் மற்றும் வட்டி குறித்த முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post Office திட்டம்:
இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக பல சிறப்பான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தால் துவங்கப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் குறித்தான முழு விளக்கத்தை தற்போது பார்க்கலாம். அதாவது, இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக சந்தாதாரர்கள் எந்தவித ஆபத்தும் இல்லாமல் சிறந்த பலனை பெற முடியும். மேலும், சிறுக சிறுக சேமிக்கும் சேமிப்பாளருக்கு இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு ஒரு ஆண்டிற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும், PPF திட்டத்திற்கான வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்தப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக சந்தாதாரர்கள் 15 ஆண்டுகள் வரைக்கும் தங்களது பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். மேலும் 15 ஆவது ஆண்டின் முடிவில் பணத்தைப் பெற விரும்பவில்லை எனினும் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இத்திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.
திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்களுக்கான அறிவிப்பு – 2 நாட்கள் கோயில் மூடல்!
Exams Daily Mobile App Download
அதாவது, 15 ஆண்டுக்குப் பிறகும் பிபிஎஃப் கணக்கை நீக்க விரும்பினால் பிபிஎஃப் கணக்கு நீட்டிப்பு படிவத்தினை சமர்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஐந்து வருட தொகுதியின் மூலமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.415 வீதம் 25 வயது முதல் 50 வயது வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வரைக்கும் முதலீடு செய்து வந்தால் முதிர்வு காலத்தில் ஒரு கோடி வரைக்கும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்