இளைஞர்களுக்கான உள் & வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் – அரசு நிறுவனம் அறிவிப்பு!!

2
இளைஞர்களுக்கான உள் & வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் - அரசு நிறுவனம் அறிவிப்பு!!
இளைஞர்களுக்கான உள் & வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் - அரசு நிறுவனம் அறிவிப்பு!!
இளைஞர்களுக்கான உள் & வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் – அரசு நிறுவனம் அறிவிப்பு!!

தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள், தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பு:

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள உள்நாடு வெளிநாடு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு பின்வருமாறு,

30 நிமிடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி – பிப்.1 முதல் ‘தட்கல் புக்கிங்’ அறிமுகம்!!

1. கத்தாரில் உள்ள கே.எம்.எஸ் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 பேர் தேவை. அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.72,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு ஸ்டப் செவிலியர் படிப்பு படித்திருக்க வேண்டும்.

2. அயர்லாந்து நாட்டில் ரீகொயர்மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 40 பேர் தேவை. அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும்.

TNPSC குரூப் 1 வினா, விடைத்தாள் குளறுபடி – நிபுணர் குழு அமைப்பு!!

3. இங்கிலாந்து நாட்டில் தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 நபர்கள் தேவை. அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும்.

4. கத்தார் நாட்டில் உள்ள தோகா கத்தார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்ற பிஎஸ்சி முடித்த பெண்கள் 15 பேர் தேவை. அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் வழங்கப்படும்.

5. ஓமன் நாட்டில் டீனஸ் ஓமன் எல்எல்சி நிறுவனத்தில் டர்னர், பிட்டர், மெக்கானிஸ்ட் மற்றும் மெக்கானிக் 20 நபர்கள் தேவை. அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.29 ஆயிரம் வரை வழங்கப்படும்.

பிப்ரவரி 1 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள்:

1. ஆந்திர மாநிலத்தில், நாயுடுபேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா லிமிடெட் (டிவிஎஸ்) நிறுவனத்தில் பணியாற்ற ஆபரேட்டர்கள் 200 நபர்கள் தேவை. அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.12,000 வரை வழங்கப்படும். இந்த பணிகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் 1 ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். வாரத்தில் 6 நாட்கள் பணி நடைபெறும். தினமும் 8 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும் .

சீருடை, பழைய பயண அட்டை கொண்டு மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு!!

2. சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சிப்காட்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் மற்றும் ஆண்கள் 40 பேர் தேவை. அவர்களுக்கு சிஎன்சி மில்லிங், வெல்டிங் டிரெய்னிங் மற்றும் சாப்ட் ஸ்கில்ஸ் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்புகள் குறித்து விவரங்கள் தெரிந்து கொள்ள 9176434488 மற்றும் 8667407470 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] மின்னஞ்சல் மூலமாகவும், www.omcmanpower.com இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!