சீருடை, பழைய பயண அட்டை கொண்டு மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில் தொலைதூரங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு பழைய பஸ்பாஸ் புதுப்பிக்கப்படாததால், மாணவர்கள் பழைய பஸ்பாஸ் மற்றும் சீருடை இருந்தால் இலவசமாக பஸ்களில் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
இலவச பயண அட்டை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் நாளை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்ய மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயண அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பயண அட்டை புதுப்பிக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்படும் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
எனவே நாளை பள்ளிகள் திறப்பதால் மாணவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய பயண அட்டை கொண்டு பயணம் செய்யலாம் எனவும், பழைய அட்டை இல்லாதவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தாலே இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
30 நிமிடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி – பிப்.1 முதல் ‘தட்கல் புக்கிங்’ அறிமுகம்!!
இதுகுறித்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவர் அளித்த பேட்டியில் , ’10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பயண அட்டை வைத்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். மேலும் போக்குவரத்து துறையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள சிறப்புமிக்க செயல்பாடுகளை’ பற்றி விளக்கம் அளித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்