30 நிமிடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி – பிப்.1 முதல் ‘தட்கல் புக்கிங்’ அறிமுகம்!!
சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் புதிய முறை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
வழக்கமான முறை:
தமிழகம் முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். பொதுவாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காலியானதும் பொதுமக்கள் தங்களின் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து கொள்வார்கள். பதிவு செய்து மூன்று நாட்களில் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் வந்துவிடும்.
அரசுப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விரைவில் நியமனம்!!
தட்கல் முறை:
ஆனால் ஒரே ஒரு எரிவாயு இணைப்பு மட்டுமே உள்ள பொது மக்கள் புதிய சிலிண்டர் வரும் வரை சற்று சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்ட எரிவாயு நிறுவனம் பதிவு செய்த அரைமணி நேரத்தில் புதிய சிலிண்டரை பெறும் வகையில் புதிதாக தட்கல் முறையினை அறிமுகம் செய்ய உள்ளது.
NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்படும்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
தட்கல் எல்.பி.ஜி சேவா:
தட்கல் எல்.பி.ஜி சேவா முறையில் வாடிக்கையாளர் பதிவு செய்த அரைமணி நேரத்தில் புதிய எரிவாயு சிலிண்டர் வந்து விடும். ஆனால் வாடிக்கையாளர்கள் இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் மற்றும் இந்த புதிய முறை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்