NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்படும் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

0
NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்படும்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்படும்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்படும்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தகுதித்தேர்வு மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இந்த தேர்வுகளை இணையதளம் மூலம் நடத்தப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

NMMS தேர்வுகள்:

தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தகுதித்தேர்வு மூலம் வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கான தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்- முதல்வர் அறிவிப்பு!!

இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் இந்த தேர்வுகளை இணையதளம் மூலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை, “மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்பட உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் – தமிழக அரசிடம் கோரிக்கை!!

தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஒவ்வொரு ஒன்றியம் மூலமாக இணையம் மூலமாக கற்றல், கற்பித்தல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மதுரை முதன்மைக்கல்வி கூட்ட அரங்கில் அனைத்து ஒன்றிய ஒருங்கிணைப்பாளருக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மேலும் பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் நேற்று முன்தினம் வட்டார அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆகையால் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி இணையம் மூலமாக கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வுகளை செய்து மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த வேண்டும்”, இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!