10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு – ஆசிரியர்கள் கருத்து!!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் 40% பாடங்கள் குறைப்பது குறித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அந்த அறிவிப்பு குறித்து ஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறைக்கப்பட்ட பாடங்கள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 8 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் 40% பாடங்களை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
சீருடை, பழைய பயண அட்டை கொண்டு மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு!!
அதன்படி நேற்று குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டது. அதில் ஒவ்வொரு வகுப்பிலும் இத்தனை பாட தலைப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று இல்லாமல், பாடத்தலைப்புகளில் உள்ளே சிலவற்றையும், புதிதாக சேர்க்கப்பட்ட சில பாடங்களை மட்டுமே குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டன.
NMMS தேர்வுகள் இணையம் மூலமாக நடத்தப்படும் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
இந்த அறிவிப்பு குறித்து ஆசிரியர்கள் சிலர் தெரிவித்த கருத்தில், “இந்த அளவுக்கு அரசு பாடத்திட்டங்களை குறைத்து ஏற்றுக்கொள்ள கூடியது தான், ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் இது நடப்பது சாத்தியமாகும். இல்லையென்றால் குறுகிய காலத்தில் இதனை நடத்தி முடிப்பது சாத்தியம் இல்லை. அரசின் அறிவிப்பில் எந்த கடினமான பாடங்களும் நீக்கப்படவில்லை, ஆனால் எளிதாக உள்ள பாடங்களை அரசு நீக்கியுள்ளது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்