பிப்ரவரி 1 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முழு விபரங்கள் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
செமஸ்டர் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் நேரடியாக தேர்வெழுத முடியாத சூழல் நிலவியதால், இறுதிபருவம் தவிர்த்து பிற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இறுதிபருவ மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
30 நிமிடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி – பிப்.1 முதல் ‘தட்கல் புக்கிங்’ அறிமுகம்!!
அதன்படி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சீருடை, பழைய பயண அட்டை கொண்டு மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு!!
கடந்த நவம்பர் – டிசம்பர் மாத பருவத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால் அதற்கான புதிய தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.இ., எம்.டெக்.,எம்.ஆர்க்., படிப்புகளுக்கு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு தேர்வு அட்டவணையையும் மாணவர்கள் https://aucoe.annauniv.edu/timetable.php என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்