தமிழக ரேஷன் கடைகளுக்கான புதிய உத்தரவு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பலவித புது திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கான புதிய உத்தரவை அமைச்சர் சக்கரபாணி வழங்கியுள்ளார்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை முதலான ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருவரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல தரப்புடைய ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை பொறுத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் வீதமும், அளவும் மாறுகின்றது.
Exams Daily Mobile App Download
மேலும், அவ்வப்போது ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கார்டுகள் தொடர்பான பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதாவது, ரேஷன் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கும் போது சிந்தாமல் சிதறாமல் வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், ரேஷன் பொருட்களை வைத்திருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தரையில் சிந்திய ரேஷன் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து – அதிரடி அறிவிப்பு
இந்நிலையில், மேலும் ஒரு புதிய அறிவிப்பு வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதாவது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை என அனைத்து பொருட்களையும் பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கூடிய விரைவில் அரிசி ஆலை தொடங்கப்படும் எனவும், ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.