தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து – அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க உள்ளதாக தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.
கல்வி கட்டணம்
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல கோடிக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதே போன்று தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இழப்பீடு தொகை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தினருக்கு பேருதவியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது இறப்பு விகிதமும் முழுவதுமாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பெற்றோர் இருவருமே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதனால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி படிப்புக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி படிப்பை தொடர்ச்சியாக மேற்கொள்ள முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் நாளை முதல் பார்சல் சேவை தொடக்கம் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
இதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் படித்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தனியார் பள்ளியில் பயிலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.