அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை ஆனது கடந்த வாரம் முதல் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா கடற்கரைக்கு அருகில் கரையை கடந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது தெற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது.
தமிழக மக்களே.. நாளை (20.10.2024) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படுமா?? விவரம் இதோ!!
இதனால் அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நோக்கி நகரும். இதேபோன்று, வங்கக் கடலில் வரும் அக்டோபர் 22ம் தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் அக்டோபர் 19, 20, 21, 24ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.


























