புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை!

0
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை!
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை!
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை!

தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த தவறான வதந்திகளை பரப்பிய விவகாரத்தில் யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்ய கோரி அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.

தமிழக அமைச்சரவை புதன்கிழமைக்கு மாற்றம்? புதிய அமைச்சர்கள் நியமனம்? வெளியான தகவல்!

இது போன்ற தவறான வதந்திகளை பரப்பியவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணீஷ் காஷ்யப் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணீஷ் காஷ்யப் தவறான தகவல்களை பரப்பி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் அவரது மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அமைதியான மாநிலமான தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எந்த ஒரு கருத்துக்களையும் பதிவிட கூடாது என்று அறிவுறுத்தியது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!