இன்று மாலை முதல் மார்ச் 28 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!
உக்ரைன் தலைநகரான கிவ்வில் போர் பதற்றம் நிலவி வரும் காரணத்தினால் மக்களை பாதுகாப்பதற்காக இன்று மாலை முதல் மார்ச் 28 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக கீவ் மேயர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
நோட்டா அமைப்பில் உக்ரைன் நுழைய முயற்சித்து தான் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் விவகாரத்துக்கு காரணமாக அமைந்தது. இதனால் நோட்டா கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். இதனையும் மீறி நோட்டா கூட்டமைப்பில் நுழைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் மேற்கொண்டதால் மட்டுமே இத்தனை சேதத்தையும் உக்ரைன் சந்திக்க நேர்ந்தது. உக்ரைன் தலைநகரான கிவ்வின் கிழக்கு பகுதியில் இழந்த நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயிலில் பயணம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!
இருப்பினும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்துவதை மட்டும் நிறுத்தவே இல்லை. பிப்ரவரி 24 ஆம் தேதி ஆரம்பமான இந்த தாக்குதல் ஒரு மாதம் ஆகிய நிலையிலும் நீட்டிக்கப்பட்டு தான் வருகிறது. கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும், மிகப்பெரிய அணுமின் நிலையங்களையும் கைப்பற்றியது. தற்போது உக்ரைனின் சுகாதார அமைப்புகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருந்து விநியோகக் கடைகள் முதலான அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 2 நாட்கள் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்? அமைச்சர் விளக்கம்!
இந்த தாக்குதலில் இருந்து தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முகாம்களிலிருந்து மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் மக்களை வெளியே அனுமதிப்பது இல்லை. தற்போது உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று மாலை முதல் மார்ச் 28 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கீவ் மேயர் அறிவித்துள்ளார்.