“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், முல்லைக்கு குழந்தை பிறக்காது என டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் குடும்பமே வருத்தத்தில் உள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக முல்லை கர்ப்பமாகியுள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அடுத்து வரும் ட்விஸ்ட் எபிசோட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் ஆகும். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சித்ரா, ஹேமா ராஜ்குமார், சரவண விக்ரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் மக்களின் மத்தியில் பிரபலமாகி உள்ளது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணன் தம்பி 4 நான்கு பேரும் உழைத்து புதிய சூப்பர் மார்க்கெட் கடையை கட்டி விட்டனர். இந்த சீரியல் முழுவதும் பாச நிகழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கோபி என்னை ஏமாற்றவில்லை – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குறித்து மனம் திறந்த நடிகை சுசித்ரா!

இந்நிலையில் சில வாரங்களாகவே முல்லை-கதிர் பற்றிய எபிசோடுகள் ஒளிபரப்பட்டு வருகிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற விஷயம் கதிருக்கு மட்டும்தான் தெரியும். இந்த விஷயத்தை முல்லையிடம் மறைக்க வேண்டும் என்று கதிர் முயற்சி செய்கிறார், அதற்காக முல்லைக்கு தெரியாமல் டாக்டர் கொடுத்த ரிப்போர்டை மறைத்து வைக்கிறார். ஆனால் முல்லை அந்த ரிபோர்டை பார்த்து தனக்கு குழந்தை பிறக்காதோ? என்ற சந்தேகம் முல்லைக்கு வர, அவர் மீனாவுடன் சேர்ந்து முல்லை வேற ஒரு டாக்டரை பார்க்க சென்றார். அப்போது முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை முல்லை மற்றும் மீனாவுக்கு தெரிய வந்தது.

இதனால் முல்லை அழுதுகொண்டே எங்கேயோ சென்று விட்டார். அவரை கதிர் தேடி அலைகிறார். அப்போது முல்லையை பார்த்த கதிர், முல்லைக்கு சமாதானம் சொல்கிறார். கதிர் முல்லையை சமாளித்து மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். முல்லை வீட்டிற்கு வந்து யார் முகத்தையும் பார்க்க முடியாமல் சங்கடத்தில் உள்ளார். முல்லைக்கு வீட்டில் உள்ள அனைவரும் சமாதானம் சொன்னார் இருப்பினும் முல்லை அழுது கொண்டுதான் இருந்தார். அதற்கு பிறகு குழந்தை பிறக்க முல்லைக்கு சிகிச்சை மேற்கொள்வார்கள். அதன் பிறகு கண்டிப்பாக முல்லை கர்ப்பம் ஆவார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அதிரடி திருப்பமாக இயற்கையாக முல்லை திடீரென கர்ப்பமாகியுள்ளார். மேலும் என்ன நடக்கும் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!