தமிழகத்தில் 2 நாட்கள் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்? அமைச்சர் விளக்கம்!
இந்தியாவில் வருகின்ற 28,29 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற உள்ளது. அதற்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இந்த இரண்டு நாட்கள் அரசு பஸ்கள் இயங்குமா என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கமாக தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்:
நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் பாதுகாத்து வந்தனர். மேலும் இந்த நேரத்தில் மக்கள் வீட்டை வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது தவிர திருவிழாக்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என அனைத்தும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் மக்களும் அமைதி காத்து வந்தனர். ஆனால் தற்போது சென்ற வருடம் இறுதியில் கொரோனாவின் மூன்றாவது அலை குறைந்த நிலையில் நாடு முழுவதும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு!
அதன் காரணமாக தற்போது இந்தியளவில் மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் வருகின்ற மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோ ஒர்க் நோ பே என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர். இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.