ரயிலில் பயணம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

0
ரயிலில் பயணம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!
ரயிலில் பயணம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!
ரயிலில் பயணம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததைப் போலவே, 100 சதவீதம் சேவையை ரயில் பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகிறது. இது தவிர பயணிகளுக்கு போர்வைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவை மீண்டும் விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது என்று இந்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

ரயில்வே துறை:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக பல தரப்பு வேலைகளும் முடங்கியது. அதில் முக்கிய ஒன்று ரயில்வே துறை. இந்த ரயில்வே துறையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு, முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அனைத்து இந்திய ரயில்வே ரயில்களின் ஏசி பெட்டிகளிலும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் கர்டெய்ன்ஸ்களை வழங்குவதைத் திரும்பப் பெற முடிவு செய்தார்.

வங்கியுடன் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயம் – அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

இந்நிலையில் கொரோனா காலத்தில் லினன் துணிகள் மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்ற போதிலும், இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு லினன் துணிகளை வழங்கவில்லை என்று சில செய்திகள் வெளியானது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது, ரயில் பயணிகளுக்கு போர்வைகள், படுக்கை விரிப்புகள் போன்ற லினன் துணிகளை மீண்டும் வழங்குவது குறித்து தேசிய டிரான்ஸ்போர்ட்டர் அறிவித்த தேதியிலிருந்து போர்வைகள், படுக்கை விரிப்புகள் போன்றவை மீண்டும் விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது என்று ரயில்வே அமைச்சகம் கூறியது.

அதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில், ரயில்வே அமைச்சகம், ரயில் பெட்டிகளுக்குள் லினன் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் கர்டெய்ன்ஸ்களை பயணிகளுக்கு வழங்கவுள்ளது. மேலும் இந்திய போக்குவரத்து கழகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, தேசிய போக்குவரத்து கழகமானது ரயில் பயணிகளின் தேவைக்கேற்ப போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்தது. இதையடுத்து ரயில் பயணிகள் அவர்களின் நலன் கருதி ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது அவர்களின் சொந்த போர்வைகளையே பயன்படுத்துமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். இருப்பினும் சில பயணிகளின் அவசர தேவைக்காக கூடுதலாக சில போர்வைகள் சுத்தம் செய்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!