மார்ச் 23 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கும் முடிவு என்ன?
சீனாவை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில் கொரோனா வந்தாலும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தப் போவதில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். இருப்பினும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் முடிவு என்ன?
இன்று வரை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் நகரில் பரவத் தொடங்கின. இதனால் வூகான் நகரமே அதிக பேரழிவுக்கு ஆளானது. தினசரி தொற்று பாதிப்புடன், உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. மேலும் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டது. இருப்பினும் நோய் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
கடந்த 2 வருடங்களில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இன்னும் அதிலிருந்து மீண்டு வர போராடி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் குறைந்து வருகிறது. இருப்பினும் சில தினங்களாக கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இதை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிலும் சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் படி, வரும் 23 ஆம் தேதி முதல், பொதுப் போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயம் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஜனவரி மாத விபரங்கள் வெளியீடு!
ஆனால் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இரவு விடுதிகள் மற்றும் பிற பெரிய அளவிலான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தேவைப்படும் டிஜிட்டல் கொரோனா நுழைவுச்சீட்டு முறையையும் அடுத்த வாரம் முதல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், கொரோனா தொற்றுடன் வாழ நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்படுவதாக நெதர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.