தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகாமையில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 (நாளை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்து உள்ளது மாவட்ட நிர்வாகம்.

உள்ளுர் விடுமுறை:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் எந்த ஒரு திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. இதுமட்டுமில்லாமல் திருமண நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் சென்ற வருடம் இறுதியில் இருந்து தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. இது தவிர அந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதற்கான தேதியையும் தெரிவித்து உள்ளனர். இதனால் மாணவர்களும் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறைந்த காரணத்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா மிகவும் சக்தி வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த குண்டம் திருவிழா மார்ச் 22(நாளை)ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நாளை நடைபெற உள்ள குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று இரவு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த விழாவிற்கு உள்ளுர் விடுமுறை அளிக்குமாறு அந்த ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 செவ்வாய் கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!