EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஜனவரி மாத விபரங்கள் வெளியீடு!
இந்தியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் 15 லட்சம் பேருக்கு மேல் பிஎஃப் திட்டத்தில் இணைந்து உள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பாக உறுப்பினர் சேர்க்கை விவரங்களை தெரிவித்து உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு :
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் சார்பில் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணிக் காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்பக் கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனாலும் இந்த பிஎஃப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த நிலையில் EPFO அமைப்பு அவ்வப்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில் தற்போது கொரோனா காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்காக பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு நிறைய பேர் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக் கொண்டு தங்களது கணக்கை மூடினர். மருத்துவச் செலவுக்கு மட்டுமல்லாமல் மற்ற தேவைகளுக்கும் பணத்தை அதிகமாக எடுத்து பயன்படுத்தி கொண்டனர். பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்தால் அதன் வட்டி லாபம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களில் பிஎஃப் அமைப்பிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
Reliance JIO பயனர்கள் கவனத்திற்கு – ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா!
இந்நிலையில் மாதந்தோறும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பாக உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022 ஜனவரி மாதத்திற்கான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்ற ஜனவரி மாதத்தில் 15.29 லட்சம் பேர் பிஎஃப் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் டிசம்பர் மாதத்தை விட கடந்த ஜனவரி மாதத்தில் 2.69 லட்சம் பேர் அதிகமாக இணைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.