தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு கடிதம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உட்பட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசு கடிதம்:
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை கொரோனா பாதிப்பு முழுமையாக குறையவில்லை. நடப்பு ஆண்டு ஜனவரியில் தாக்கிய கொரோனா மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதனையடுத்து, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன. இதன் பின்னர், சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், நாட்டில் தற்போது, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொடர்ந்து, தமிழகத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா பரவல் சில மாநிலங்களில், மீண்டும் வேகம் எடுத்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.