தனது மன வருத்தத்தை ராதிகாவிடம் சொன்ன பாக்கியா, கோபியின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராதிகா – இன்றைய எபிசோட்!

0
தனது மன வருத்தத்தை ராதிகாவிடம் சொன்ன பாக்கியா, கோபியின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராதிகா - இன்றைய எபிசோட்!
தனது மன வருத்தத்தை ராதிகாவிடம் சொன்ன பாக்கியா, கோபியின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராதிகா - இன்றைய எபிசோட்!
தனது மன வருத்தத்தை ராதிகாவிடம் சொன்ன பாக்கியா, கோபியின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ராதிகாவிடம் பேச ராதிகா திருமணம் செய்ய இருப்பவர் தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்கிறார். அவருடைய குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாம் பொய் என சொல்கிறார். பின் பாக்கியா அவருடைய கணவருக்கு தன்னை பிடிக்கவில்லை என சொல்லி மன வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா பாக்கியாவிடம் வருத்தப்பட்டு பேசுகிறார். நான் திருமணம் செய்ய இருப்பவர் அவருடைய குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாம் பொய் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா வருத்தப்பட இதெல்லாம் யார் உங்களிடம் சொன்னா என கேட்கிறார். அவரே தான் சொன்னார் என ராதிகா சொல்கிறார். அப்போது பாக்கியா அவரே சொல்லி இருந்தால் நல்லவராக தான் இருப்பார் என சொல்கிறார். அவருக்கு தான் விவாகரத்து ஆக இருப்பது உங்களுக்கு தெரியுமே என கேட்க, ஆமாம் அப்படி தான் அவர் சொன்னார் என ராதிகா நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

டீச்சர் விவாகரத்து வாங்க இருந்தால் என்னிடம் சொல்லி இருப்பாரே என ராதிகா குழப்பமடைகிறார். பின் பாக்கியா எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல ராதிகா நீங்க எப்படி இருக்கீங்க என கேட்கிறார். அப்போது பாக்கியா நானும் வருத்தமாக தான் இருக்கிறேன் என் கணவருக்கு தொடக்கத்தில் இருந்தே என்னை பிடிக்கவில்லை. ஆனால் குடும்பத்தில் அனைவரிடமும் அவர் சந்தோசமாக இருப்பார். ஆனால் சில நாட்களாக அது கூட இல்லை. அவர் குடும்பத்தில் யாரிடமும் சரியாக பேசுவதில்லை.

அதனால் வீடே நல்லா இல்லை என சொல்கிறார். என்னை பிடிக்கவில்லை என பல முறை சொல்கிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும் என பாக்கியா சொல்ல ராதிகா அதை நினைத்து வருத்தப்படுகிறார். உங்க வாழ்க்கையில் எதுவும் ஆகாது என ஆறுதல் சொல்கிறார். பின் மயூராவுடன் விளையாடிவிட்டு பாக்கியா கிளம்புகிறார். வீட்டில் தாத்தா கொஞ்சம் கொஞ்சமா பேச தொடங்குகிறார். அதை பார்த்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். அப்போது மயூரா போன் செய்வதாக இனியா சொல்ல மயூராவிடம் நன்றாக பேசு என பாக்கியா சொல்கிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – 3 நாட்கள் கடைகள் மூடல்?

அப்போது ஏன் என இனியா கேட்க அவங்க அம்மா அடித்ததால் கோவமாக இருப்பதாக சொன்னால் என சொல்கிறார். ராதிகா அடிப்பார்களா என கேட்க அவங்களுக்கு நிறைய பிரச்சனை அவங்க திருமணம் செய்ய இருந்தவர் அவரை ஏமாற்றி விட்டாராம் அவருடைய மனைவி யார் என்பது இப்போது தான் ராதிகாவுக்கு தெரிந்ததாம் என சொல்ல ராமமூர்த்தி கோபி திருந்திவிட்டதாக நினைக்கிறார். பின் ஈஸ்வரி திருமணம் முடிந்து குழந்தை வந்துவிட்டால் குழந்தையை தான் பார்க்க வேண்டும் என சொல்கிறார். எழில் அதெல்லாம் இல்லை என சொல்ல நீ சும்மா இரு என சொல்கிறார். பாக்கியா எதுவும் பேசாதே என கண்ணை காட்டுகிறார்.

பின் கோபி ராதிகா வீட்டிற்கு வந்து உள்ளே வரலாமா என தெரியாமல் இருக்கிறார். அப்போது மயூரா வர கோபி மயூராவை கொஞ்சுகிறார். அப்போது ராதிகா மயூராவை உள்ளே போக சொல்கிறார். அந்த நேரம் கோபி உள்ளே வந்து மன்னிப்பு கேட்க நான் டீச்சருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்னை அப்படி செய்வேன் என எப்படி நீங்க நினைக்கலாம் இனிமேல் என் முகத்தில் நீங்க முழிக்காதீங்க என ராதிகா சொல்லி விடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!