தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – 3 நாட்கள் கடைகள் மூடல்?
தமிழகத்தில், நீண்ட நாட்களாக எந்த ஊதிய உயர்வையும் பெறாமல், நியாய விலைக் கடை ஊழியர்கள், பணியை மட்டும் மேற்கொண்டு வருவதாகவும், நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை, உடனடியாக விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்க இருக்கிறது.
வேலை நிறுத்த போராட்டம்:
இந்தியாவில் கடந்த 3 வருடங்களாகவே தொற்று மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இதில், முதல் 2 வருடங்களில் தொற்றை சமாளிக்கவும், குறைக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு ஏராளமான நிதியை செலவிடும் சூழலும் ஏற்பட்டது. அதனால்தான், அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு பிறகு, தொற்று பரவல் ஓரளவு குறைய ஆரம்பித்ததுமே, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களும், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
TN Job “FB Group” Join Now
இதற்காக போராட்டங்களையும் நடத்தினர் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 17% ல் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி உத்தரவிட்டது.. ஆனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் இந்த அகவிலைப்படியை வழங்கவில்லை.. எனவே, தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், வரும் ஜூன் 7 முதல் 9 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இது குறித்து மாநில துணை தலைவர் தினகரன், இணை செயலாளர் மாரிமுத்து கூறியது, கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஊதியம், ஓய்வூதியம்,பணிவரன் முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகிறோம். 31 சதவீத அகவிலைப்படி, தனித்துறை, புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும் ஆகிய 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜூன் 7 முதல் 9 வரை மாநிலம் தழுவிய தொடர்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது, என்றனர்.