தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.27 முதல் டிச.31 வரை மட்டுமே விடுமுறை? சர்ச்சையில் சிக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.27 முதல் டிச.31 வரை மட்டுமே விடுமுறை? சர்ச்சையில் சிக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.27 முதல் டிச.31 வரை மட்டுமே விடுமுறை? சர்ச்சையில் சிக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.27 முதல் டிச.31 வரை மட்டுமே விடுமுறை? சர்ச்சையில் சிக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறையாக டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையினால் புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் தொடந்து கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகரித்த நிலையில் இருந்து வந்ததால் நடப்பு கல்வியாண்டில் ஆரம்பத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்து வருவதால் பலமாநிலங்களில் கல்வி நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அச்சம்!

அந்த வகையில் தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் இருந்து 30% அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் அடிப்படை நிலை முதல் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 2ம் தேதி வரை முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை தற்போது, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொங்கலுக்கு வெளியாகும் அறிவிப்பு!

அதில், டிசம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் தற்போது புதிதாக குழப்பம் எழுந்துள்ளது. ஆனால் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம், 26ம் தேதி ஞாயிற்று கிழமை, மேலும், ஜனவரி 1 புத்தாண்டு , ஜனவரி 2 ஞாயிற்று கிழமை என்பதால் அந்த நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் விடுமுறை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!