தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் 2014, 2015, 2016ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால் வரும் 2022 மார்ச் 31ம் ஆம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர விரும்புபவர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். முன்பெல்லாம் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்வார்கள் தற்போது 10, 12ம் வகுப்பு முடித்தவுடன் அந்தந்த பள்ளிகள் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு இந்த வேலை வாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். இதன் மூலம் அரசு பணிகளால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது வேலைவாய்ப்பு பதிவு மிக எளிதாக மாறி விட்டது. வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம். மேலும் கல்வி தகுதியையும் பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.27 முதல் டிச.31 வரை மட்டுமே விடுமுறை? சர்ச்சையில் சிக்கிய அறிவிப்பு!

தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பை பதிவு செய்தும் அதனை தொடர்ந்து புதுபித்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2014,2015,2016 ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையாக 3 மாத அரசு கால அவகாசம் அளித்துள்ளது. இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அச்சம்!

அதில் 2014,2015,2016 ம் ஆண்டுகளில் அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர் 2021 ஆம் ஆண்டு டிசம்பா் 2 முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக புதுப்பித்துக் கொள்ளலாம் இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றும், பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இச்சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!