தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொங்கலுக்கு வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்த 5 பவுனுக்கு உட்பட்ட நகைகளின் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு திட்டமிட்டு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வாங்கியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது நகைக்கடன் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டது.
சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல் – 3வது இடம் பிடித்த இந்திய அணி! ரசிகர்கள் உற்சாகம்!
இது குறித்து மாவட்டம் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நகை கடன்கள் தள்ளுபடி குறித்த அரசாணையை வெளியிட்டார். மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. அதாவது ஒரு ரேஷன் அட்டைக்கு 5 சவரன் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றிருந்தால் அவை தள்ளுபடி செய்யப்படும் என்றும் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதிங்க !
மேலும் கடந்த ஆட்சியில் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான ஆய்வு பணிகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி சென்றடைய வேண்டும் என்பதால் பணிகள் தாமதமாகிறது. மேலும் கடன் தள்ளுபடி சான்று மற்றும் அடகு வைத்த நகைகளை பொங்கல் பண்டிகைக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.