அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதிங்க !
தற்போது தமிழகத்தில் அரசு அலுவலங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காப்பீடு முகவர்
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தற்போது அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கான வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஓமிக்ரான் பரவலை தடுக்க எந்த கட்டுப்பாடுகளும் இல்லை – மாநில முதல்வர் அறிவிப்பு!
இப்பணியிடத்தில் சேருவதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு வருகிற 27-ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி – 628501 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5 ஆயிரத்தை காப்பீட்டு தொகையாக தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இந்த தொகையானது ஏஜென்சி காலம் முடியும் போது அவர்களுக்கு வட்டியுடன் திருப்பி வழங்கப்படுகிறது.
SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி காலிப்பணியிடங்கள் – சம்பளம், தகுதி உள்ளிட்ட விவரங்கள் இதோ!
மேலும் இதில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வேலைவாய்ப்பற்ற அல்லது சுய தொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி, மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் போன்ற அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 04632-220368 – கோவில்பட்டி, 04636-222313 – சங்கரன்கோவில், 04633-222329 – தென்காசி ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.