EPFO பயனாளர்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை டெபாசிட் – முழு விவரம் இதோ!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி பயனாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் இந்த பணம் கிடைக்கும் என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வருங்கால வைப்பு நிதி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். மாதம் தோறும் தவறாமல் பிடிக்கப்படும் இந்த பிஎஃப் பணம் உங்களது அக்கவுண்ட் பேலன்ஸாக இருக்கிறது. இந்நிலையில் உங்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கான மொத்த வட்டியை கொடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் படி நாடு முழுவதும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகைக்கு ரூ.40,000 டெபாசிட் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின் படி, PF கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வைப்பு நிதி வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ. 40,000 வைப்பு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.40 ஆயிரம் தொகை, உங்கள் 5 லட்சம் பேலன்ஸிற்கான வட்டியாக வழங்கப்படும். இந்த தொகையானது எப்போது வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கட்டாயம் ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் எளிதாக பார்க்கலாம். அதற்கு,
இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – இனி இதற்கு தடை! IRCTC அறிவிப்பு
- முதலில் epfindia.gov.in என்ற இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
- அதில் Click here to know your EPF balance’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் epfoservices.in/epfo/ என்ற பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள்.
- அதில் ‘member balance information’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், உங்கள் PF கணக்கு எண் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும்.
- அதில் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் மாநிலத்தின் EPFO அலுவலகத்தின் இணையதள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- எடுத்துக்காட்டாக, உங்கள் மாநில அலுவலகம் தமிழ்நாடு மற்றும் உள்ளூர் அலுவலகம் சென்னையாக இருந்தால், சென்னையை நகரமாகத் தேர்வு செய்யவேண்டும்.
- அதன் பிறகு ‘Submit’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் முழு செயல்முறையும் முடிந்தவுடன், உங்கள் PF கணக்கு பேலன்ஸ் டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும்.
- மேலும் மிஸ்டு கால் மற்றும் SMS மூலமாகவும் உங்களுடைய PF கணக்கு பேலன்ஸை நாம் அறிந்துகொள்ள முடியும்.
- அதற்கு உங்களுடைய PF கணக்கு விபரம், உங்கள் மொபைல் போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மேலும் 11-22901406 என்ற இந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தால் உடனே பிஎப் தகவல் கிடைக்கும்.
- மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் பேலன்ஸ் தகவல் அனுப்பி வைக்கப்படும்.