இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – இனி இதற்கு தடை! IRCTC அறிவிப்பு!
இந்தியாவில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதற்கு மாற்றாக பிற பொருட்களை உபயோகபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் IRCTC புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
IRCTC:
இந்தியாவில் மக்கள் பெருமளவு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். நாம் எங்கு சென்றாலும் பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வது, பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவது அதிகமாக நடைபெறுகிறது. இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்படைகிறது. மேலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மண் வளம் குறைவதாகவும், இந்த பிளாஸ்டிக்கை உண்ணும் விலங்குகள் உயிரிழக்க நேரிடுவதாகவும் கூறுகின்றனர். மேலும் நில வாழ் உயிரிகள் மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் தற்போது கடலுக்குள் சென்று கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 120 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் IRCTC ரயில்வேயின் கேட்டரிங் துறையிலிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக்கு பதிலாக மாற்று பொருட்கள் உபயோகிப்பது குறித்து ரயில்வே துறை ஆலோசித்து வருகிறது.
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நாளை (ஆக.3) மாதிரி தேர்வு
எவ்விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கலாம் என்பது போன்ற வழிகாட்டுதல் நடைமுறைகளை உருவாக்கும் முயற்சியில் IRCTC இறங்கியுள்ளது. மேலும் பயணிகளுக்கு பாக்குமட்டை, மரம், அட்டை பெட்டிகளால் செய்யப்பட்ட பொருட்கள் மூலமாக உணவு வழங்க மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்கும் படி ரயில்வே நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததை அடுத்து ரயில்வே நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.