தமிழகத்தில் ஜூன் 5 தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை, ஆகிய மாவட்டங்களில் ஜூன் 5ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலை தேடுவோர் பங்கேற்று பயன் பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும். இடையில் கொரோனா தாக்கத்தால் முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. பிறகு பதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அரசு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் 8ம் வகுப்பு கல்வி தகுதி பெற்றோர்கள் முதல் பட்டப்படிப்பு முதல் பட்டய படிப்பு வரை வேலை வாய்ப்பை பெறலாம். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து செங்கல்பட்டு, மற்றும் சென்னை திருவொற்றியூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 8ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் முகாமானது ஜூன் 8-ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்.
தமிழகத்தில் 11-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் ஜூன் 5ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு தேவைப்படுபவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்,சுய விவர குறிப்பு ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். டிப்ளமோ, இன்ஜினியரிங், டிப்ளமோ நர்சிங், ஆய்வக உதவியாளர், மருந்தாளுனர் படித்த வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளலாம். எனவே வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.