மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற 6 தமிழக கட்சி உறுப்பினர்கள் – வெளியான அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தலில் தமிழக கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேருமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான நேரம் நிறைவடைந்த நிலையில், தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தல்:
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட நாடு முழுவதும் 57 எம்பி பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த மே 24-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்குதல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலங்களவை எம்பி ஆவதற்கும் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. திமுகவிற்கு 4 இடங்களுக்கும், அதிமுக இரண்டு இடங்களுக்கும் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் பின்னர் திமுக காங்கிரசுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி விட்டு தன் சார்பில் வேட்பாளர்களை அறிவித்தது. திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ் குமார் ஆகியோர் கடந்த மே 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர சுயேச்சையாக பத்மநாதன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன், சோழகனார், தேவராஜன் ஆகிய 5 பேர் மனு தாக்கல் செய்தனர். சுயேச்சையாக மொத்தமாக 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே வேட்புமனுத்தாக்கல் மதியம் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 6 மக்களவை எம்பி பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 6 பேர் மற்றும் சுயேச்சைகள் 7 பேர் என மொத்தமாக 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் 5 தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கடந்த ஜூன் 1-ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று மாலை 3 மணி வரைக்கும் வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்பு சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பின்பு திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட 6 பேருமே தேர்தல் இன்றி மாநிலங்களவை எம்பி களாக தேர்வாகியுள்ளனர்.