தமிழகத்தில் 11-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 11-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் 11-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் 11-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா முடக்க நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேலையின்மை உச்ச நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பை பெறுவது அனைவருக்கும் சவாலான விஷயமாக உள்ளது. அதுவும், தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர் அதிகம் வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது. மேலும் இதை தடுக்கும் விதமாகவும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதில், தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாராசுரம் கே.எஸ்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது. இந்த முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ. முடித்து விட்டு வேலை தேடுவோருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!