மருத்துவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு – 47 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம்!!

0
மருத்துவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு - 47 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம்!!
மருத்துவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு - 47 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம்!!
மருத்துவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு – 47 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம்!!

மருத்துவ படிப்பிற்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வு உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சுமார் 3 மணி நேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது. நடந்து முடிந்த இந்த கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 47 இடங்கள் நிரப்பப்பட்டன.

மருத்துவ கலந்தாய்வு:

மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதல்கட்ட கலந்தாய்வு நவம்பர் மாதம் 18-தேதி முதல் தொடங்கி பின் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இதில் முதலில் நடந்து முடிந்த கலந்தாய்வு முடிவில் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள்  மற்றும் முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராத மாணவர்களின் இடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு நடைபெற்றது.

தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் – ரேஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!!

இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் தரவரிசை எண் 1 முதல் 397 வரை உள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கும் என்றும் 7.5% ஒதுக்கீட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான 47 இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் காரணமாக கல்லூரியில் சேர முடியாத மாணவர்களுக்கு அரசே முழு கல்விக்கட்டணத்தையும் ஏற்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுருந்தது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இலக்கியா, கடலூரை சேர்ந்த தர்ஷினி, சௌமியா ஆகிய மாணவிகள் ஏற்கனவே கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளில் சேர முடியாததால் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த 3 மாணவிகளுக்கும் முன்னுரிமை வழங்க உத்தரவிட்டனர்.

மத்திய அரசு பணிகளுக்கு மேலும் 89 பேர் தேர்வு- யுபிஎஸ்சி அறிக்கை!!

தற்போது அந்த 3 மாணவிகளுக்கும் மருத்துவ படிப்பிற்கான ஆணையை மருத்துவ கல்வி இயக்கம் வழங்கியது. இதற்கான ஆணையை செயல்படுத்துவதற்காக சுமார் 3 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதன்படி நடந்து முடிந்த கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 12 இடங்களும், அரசு பல் மருத்துவமனைகளில் உள்ள 4 இடங்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 20 பி.டி.எஸ் இடங்களும், 11 எம்.பி.பி.எஸ் இடங்களும் என மொத்தம் 47 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்காக நிரப்பப்பட்டன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!