தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் – ரேஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!!
ரேஷன் கடை பணியாளர்களின் 16 அம்ச கோரிக்கையை உடனே நிறைவேற்ற கோரி நாளை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பொங்கல் பரிசு பொருள்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல்:
சென்னை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம், திருச்சி, மதுரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் அரசு செய்யக்கோரி நாளை ஒருநாள் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு பணிகளுக்கு மேலும் 89 பேர் தேர்வு- யுபிஎஸ்சி அறிக்கை!!
இதுகுறித்து ரேஷன் கடை சங்க நிர்வாகிகள் கூறுகையில், “ரேஷன் கடை ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சனைக்காக இந்த காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே ஜனவரி 6 (நாளை) ஒரு நாள் மட்டும் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் அன்று பொங்கல் பரிசு வழங்கப்படாது” என தெரிவித்தார்.
TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள் – மதிப்பெண்கள் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!
ரேஷன் கடை மாவட்ட தலைவர் போன் அமைதி, செயலாளர்கள் சேதுராமன், சேது ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் துண்டு பிரசுரம் விநியோகித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள மாநில தலைமை அறிவிப்பு செய்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக நாளை வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்