மத்திய அரசு பணிகளுக்கு மேலும் 89 பேர் தேர்வு- யுபிஎஸ்சி அறிக்கை!!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி சார்பாக உள்ள 927 காலியிடங்களில் 829 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 89 பேரை மத்திய அரசு பணிகளுக்காக பரிந்துரைத்துள்ளது.
யு.பி.எஸ்.சி தேர்வு:
மத்திய அரசில் காலியாக உள்ள 927 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை கடந்த 2019 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி நடத்தியது இந்த தேர்வின் முடிவுகளை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி வெளியிட்டது. இதில் ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ், குரூப் ஏ, குரூப் பி பணிகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக 829 பேரை தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.
TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள் – மதிப்பெண்கள் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!
மீதமுள்ள 89 பணியிடங்களுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த வகையில் 73 பேர் பொதுப்பிரிவிலும், 14 பேர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் எஸ்.சி பிரிவில் தலா ஒருவரையும் தேர்ந்தெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18 முதல் அரசு கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – கட்டுப்பாடு அலுவலர் அறிவிப்பு!!
927 பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 89 பேர் குறித்த விவரங்களை http//www.upsc.gov.in என்ற யு.பி.எஸ்.சி-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்