ஜனவரி 18 முதல் அரசு கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – கட்டுப்பாடு அலுவலர் அறிவிப்பு!!
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்த நிலையில் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்திருந்தது. இதன்படி தற்போது கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற ஜனவரி 18 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்:
கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற ஜனவரி 18 முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் த.வீரமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “கோவை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான நடப்பு ஆண்டுக்கான பருவத்தேர்வு ஜனவரி 18 முதல் தொடங்கவுள்ளது.
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!
இதன்படி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுகள் ஜனவரி 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரையிலும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான 4 மற்றும் 6-ம் பருவத் தேர்வு ஜனவரி 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் இந்த தேர்வுகளை இணையம் வழியாக நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!
தேர்வுக்கான வினாத்தாள்கள் பல்கலைக்கழகம் சார்பாக அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இணையம் வழியாக தேர்வு எழுதி விடைத்தாள்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கட்டணத்தை ஜனவரி 5-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை இணையம் வழியாக அனுப்பலாம். ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் அனுப்ப தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்