ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!

1
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்-பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்-பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்-பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!

பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பின்னர் பல தளர்வுகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பின் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு தற்போது ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஷப்கத் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் காரணமாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. சில நாடுகள் பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. பல தளர்வுகளுக்கு பின் பாகிஸ்தான் அரசு கடந்த ஜூன் மாதம் பள்ளிகளை திறந்தது. தொடர்ந்து வந்த கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.

உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!

தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து அந்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஷப்கத் மஹ்மூத் செய்தியாளர்களை சந்தித்த போது, “கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜனவரி 25-ஆம் தேதி திறக்கப்படும். மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும்” என தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!