அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 ஊக்கத்தொகை – மாநில அரசு திட்டம்!!

0
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 ஊக்கத்தொகை - மாநில அரசு திட்டம்!!
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 ஊக்கத்தொகை - மாநில அரசு திட்டம்!!
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 ஊக்கத்தொகை – மாநில அரசு திட்டம்!!

பெண் குழந்தைகலின் கல்வியை மேம்படுத்துவதற்காக, பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவிக்கும் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூ.100 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அசாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு ஊக்கத்தொகை:

நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும், மேம்படுத்தவும் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அசாம் மாநில அரசு புது ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. அதன்படி பெண் குழந்தையின் கல்வியை மேம்படுத்துவதற்கான முதல் முயற்சியில், பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவியும் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூ.100 வழங்கப்பட உள்ளது.

ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

மேலும் பிரக்யன் பாரதி திட்டத்தின் கீழ் மாநில கல்வித்திட்டத்தில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்ற 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாநில அரசு தற்போது 22,000 இருசக்கர வாகனங்களை விநியோகித்து வருவதாக அசாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார். இதற்காக அம்மாநில அரசு 144.30 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள் – மதிப்பெண்கள் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!

இந்நிலையில் நடப்பு மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு ரூ.100 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார், ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதி செலவீனங்கள் போன்ற விவரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலை – கல்வித்துறை ஆய்வு!!

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முதல் பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,500 மற்றும் ரூ .2,000 டெபாசிட் செய்யப்படும். புத்தகங்கள் மற்றும் பிற ஆய்வுப் பொருட்களை வாங்க அவர்களுக்கு உதவ இரண்டு நிதி ஊக்கத் திட்டங்களும் முதலில் கடந்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக அதனை ஒத்திவைக்க வேண்டியிருந்தது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!