18 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – பொதுமக்களே உஷார்!!
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை விழுப்புரத்தில் மழை பெய்ய வாய்ப்பு; கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று அதி வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரையிலும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.