தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் – கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் – கல்வித்துறை அறிவிப்பு!

தமிழக பள்ளிக்கல்வித்துறையானது மாநிலத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரையாண்டு தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு:

தமிழக பள்ளிக்கல்வித்துறை வாரியம் ஆனது தற்போது அரையாண்டு தேர்வு குறித்த அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளது. சுற்றறிக்கையின் படி மாநிலத்தில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என்றும், இதற்காக இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் 22ஆம் தேதி வரை 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது.

அரசின் ‘இந்த’ திட்டத்தில் ஊக்கத்தொகை ரூ.12,000 ஆக உயர்வு – பிரதமர் அறிவிப்பு!

மேலும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் அட்டவணையை பின்பற்றி மட்டுமே தேர்வுகளை நடத்த வேண்டும். அதற்கு முன்கூட்டி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வினாத்தாள்களை பாதுகாப்புடன் ஆன்லைன் வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு நாளில் மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!