தமிழக கோவில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல் – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் பாரம்பரியமிக்க பல கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்கள் இந்து அறநிலையத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்காக பல ஊழியர்களை நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும், பழமையான கோயிலை பராமரிக்கும் மற்றும் பாதுகாக்கும் பணிகளை கோவில் ஊழியர்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டது.
TNUSRB தேர்வுக்கு தயாராகுறீங்களா? அப்போ உடனே இதை வாங்குங்க.. தேர்ச்சி நிச்சயம்!
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது எனவும், கோயில் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரி அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது. மேலும் கோயில் வருவாய், செலவுகளை மத்திய சி.ஏ.ஜி. தணிக்கை செய்வதால் மாநில அரசு உரிமை பறிக்கப்படாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.