டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் – குவியும் புகார்கள்.. மாநில அரசின் கடும் நடவடிக்கை!
திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
டியூசன்:
இந்தியாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக மாணவர்களுக்கு டியூசன் எடுக்கபது வழக்கமான செயலக உள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து பல மாநிலங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்க அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுத்து அதன் வாயிலாக சம்பாதிப்பது அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர் கல்வி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் டியூசன் மூலம் வாழ்வாதாரம் ஈட்டி வரும் நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் செயலால் இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு நீக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இது தொடர்பாக ஆய்வில் அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுத்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வருகை தருவதில்லை. இந்த புகார் குறித்து விசாரிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆசிரியர்கள் விசாரணை குழுவிடம் நேரடியாக ஆஜராகி விசாரணைக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.