புகழ்பெற்ற இதய மருத்துவர் கௌரவ் காந்தி மாரடைப்பால் மரணம் – அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!
புகழ் பெற்ற இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கௌரவ் காந்தி திடீர் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார். இவரது இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதய மருத்துவர்:
குஜராத்தை சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற இதய நோய் நிபுணர் டாக்டர் கௌரவ் காந்தி அவர்கள் 41 வயதாகியுள்ள நிலையில், திடீரென்று நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 45 நிமிடங்களில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
தமிழக கோவில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல் – நீதிமன்றம் உத்தரவு!
இதுவரை 16,000 க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை செய்துள்ள மருத்துவர் கௌரவ் காந்தி இதய நோயால் உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இளம் வயதிலேயே இது போன்ற மரணங்களுக்கு அவர்களின் வாழ்கை முறை, புகை மற்றும் மது பழக்கம் இதோடு மனஅழுத்தமும் தவிர்க்க முடியாத காரணங்களில் ஒன்றாக உள்ளதாக சுகாதார மற்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.