BSNL நிறுவனம் 4ஜி, 5ஜி அலைக்கற்றை தொடங்க ரூ.89,047 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் BSNL நிறுவனம் சார்பில் 4ஜி, 5ஜி அலைக்கற்றைக்கு ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL வலுவான கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் இன்னும் 4ஜ, 5ஜி சேவைகளை வழங்காமல் இருக்கிறது. இதனால் பல வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களை நோக்கி நகர தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
புகழ்பெற்ற இதய மருத்துவர் கௌரவ் காந்தி மாரடைப்பால் மரணம் – அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!
அதன் படி இது குறித்து வெளியான அறிவிப்பை தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் பங்குகள் கிட்டத்தட்ட 12% உயர்ந்தன. இந்த நிறுவனத்தை விரைவில் மூட மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. மேலும் BSNL 4ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்காக மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐடிஐக்கு ரூ.3,889 கோடி மதிப்பிலான குறிப்பிடத்தக்க முன்கூட்டிய கொள்முதல் ஆர்டரை (ஏபிஓ) வழங்கி இருக்கிறது. மேலும் BSNL ஏறக்குறைய 25000 கிராமங்களுக்கு 4ஜி நெட்ஒர்க்கை வழங்க இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு 4G, 5G அலைக்கற்றை உரிமம் வழங்கியதுடன் BSNL நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடியை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.